என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நெல்லை ரெயில்வே நிலையம்
நீங்கள் தேடியது "நெல்லை ரெயில்வே நிலையம்"
நெல்லை மற்றும் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட 97 ஆசியர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #JactoGeoStrike
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ சார்பாக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், ராஜசேகர், பவுல், பொன்னுசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 1200 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 42 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைதான ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JactoGeoStrike
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ- ஜியோ சார்பாக கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ராம்குமார், ராஜசேகர், பவுல், பொன்னுசாமி உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற 1200 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 42 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இதுவரை மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைதான ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களது பணியிடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JactoGeoStrike
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X